கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, அரசின் சார்பில்
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிவகங்கை மாவட்டம், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்
குட்பட்ட சூரக்குளத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில் , அவர்களது திருவுருவச்சிலைக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார் , (மானாமதுரை) எஸ்.மாங்குடி (காரைக்குடி) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, அவ்வளாகத்தில் அமைந்துள்ள வீரத்தாய் குயிலி அவர்களின் திருவுருவச்சிலை மற்றும் நினைவுச்சின்னத்திற்கும், அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசுகையில், இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி வெற்றி கண்டு, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதல் வீரப்பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்த நாள் விழா இன்றையதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகச்செம்மல்களை என்றென்றும் போற்றி பாதுகாக்கும் வண்ணம், நினைவு மண்டபங்கள் அமைத்து பாதுகாத்து வந்தத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆவார்கள்.
அவ்வழியில் சிறப்பான ஆட்சியினை தமிழகத்தில் நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் அளப்பறியாப் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும், போராட்டங்கள் குறித்தும், தாய்மொழியான தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோர்களை கௌரவிக்கும் பொருட்டும், இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில், இந்தியா வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் , புகழை போற்றுகின்ற வகையில், சிவகங்கை மாவட்டத்தில், இவ்வீரப் பெண்மணிக்கு நினைவு மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அவர்களின் பிறந்த நாளினை, அரசு விழாவாக கொண்டாடிடும் வகையில், அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-3ஆம் தேதி அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றையதினம் அவர்களது 295-வது பிறந்த நாள் விழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் புகழை பரைசாற்றுகின்ற வகையில் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபமும் மற்றும் வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவாக, இவ்வளாகத்தில் நினைவுச்சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,
தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிற்பிற்கிணங்க வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவுச்சின்னத்திற்கு அருகில் ரூ.50.00 திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர், திருக்கரங்களால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கும் நகரம்பட்டி கிராமத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை அமைப்பதற்கான பணிகளும், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் கிராமத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் அண்ணல் காந்தியடிகள் ஜீவாவுடன் சந்தித்தது நினைவாக ரூ.03.00 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கும் பணியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதுபோன்று,சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றிடும் வகையில் அவர்களை கௌரவித்தும், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி…

Leave a Reply