சிலம்பு எக்ஸ்பிரஸ், தாம்பரம்–நாகர்கோவில் ரெயில்களில் வருகிற 1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Spread the love

சென்னையின் தாம்பரம்–செங்கோட்டை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் (20681/20682) ரெயிலுக்கு கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதில் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு, 2 ஏ.சி. மூன்றடுக்கு, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் ஒரு பொது பெட்டி சேர்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் தாம்பரத்தில் இருந்து வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல், செங்கோட்டையில் இருந்து 2-ம் தேதி முதல் அமலில் இருக்கும். இந்த தற்காலிக இணைப்பு 2026 ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்.

அதேபோல், தாம்பரம்–நாகர்கோவில் (22657/22658) நெல்லை வழியாக இயங்கும் ரெயிலில் மேலும் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் ஒரு பொது பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த கூடுதல் பெட்டிகள் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி முதல், நாகர்கோவிலில் இருந்து 3-ம் தேதி முதல் இணைக்கப்படும். இது கூட ஏப்ரல் மாதம் இறுதி வரை அமலில் தொடரும்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.