சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான் 2024 கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்
![]()
![]()
மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்தை உருவாக்க மரத்தான் டாக்டர் எஸ் ராஜசேகர் தகவல்,
சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து 2018 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி கூடைப்பந்து பயிற்சியை கங்கா முதுகுத்தண்டுவட மறுவாழ்வு மையத்தில் வழங்கி வருகிறன.
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் தாழ்வு மனப்பான்மை இன்றி ஒரு மதிப்பான வாழ்க்கை அமைந்திடவும் நமது நாட்டிற்காக விளையாட்டில் சாதிக்க ஆசைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டவும் இந்த விளையாட்டையும் பயிற்சியையும் பயன்படுத்தி வருகிறோம்.
இம்முயற்சியின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் பல மாற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம், மேலும் நமது கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய பாராதட்கள் வீரர்களை உருவாக்கவும் அவர்களுக்கு பயிற்சிக்கான உதவிகள் செய்தும் ஆதரவு அளித்துவருகிறோம்.
நம் சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் சக விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான தொடர்பை வளர்ப்பதற்காக ரன் ஃபார் வீல்ஸ் இன்க்ளூசிவ் மராத்தானை நடத்துகிறோம். இந்த ஆண்டு, சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை, Wavicle Data Solutions, Chennai Silks, Infiniti Software, IBIS យ வீல்ஸ் மாரத்தான் போட்டியின் ஐந்தாவது பதிப்பை நடத்துவதில் பெருமை கொள்கிறது. இந்த நிகழ்வில் பல்வேறு பந்தயப் பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சக விளையாட்டு வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த மாரத்தான் கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 1, 2024 அன்று காலை 5.00 மணிக்கு தொடங்கியது
விழாவிற்கு கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட துறையின் தலைவர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ் ராஜசேகரன் தலைமை தாங்கினார்
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக:
1. திரு. கிராந்தி குமார் பதி I.A.S, மாவட்ட ஆட்சியர்
2. திரு. கே.ராமசாமி, தலைவர் ரூட்ஸ் குழும நிறுவனங்கள்
மற்றும் டாக்டர் எஸ். ராஜசேகர் ஆகியோர் வீல்ஸ் மாறத்தான் தொடக்கி வைத்தனர்
கௌரவ விருந்தினர்களாக:
1. திரு. மாதேஷ் ஜெயபால், நிர்வாக இயக்குனர், Wavicle Data Solutions, India.
2. திரு. வி.விக்ரம் நாராயண், செயல் இயக்குநர், The Chennai Silks & Sree Kumaran
Thangamaligai.
3. திரு. அஜித் ஜோஸ், பொது மேலாளர், IBIS Coimbatore City Centre.
4. திரு. செந்தில்நாதன், தயாரிப்பு மேம்பாட்டு மேலாளர், Infiniti Software Solutions.
10 கிமீ, 5 கிமீ, 3 கிமீ மற்றும் 1கிமீ என நான்கு வெவ்வேறு பிரிவுகளில் அனைத்து வயதினரையும் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த மராத்தானில் கலந்துகொள்ள உள்ளார்கள். குறிப்பாக, இந்த ஆண்டு நரம்பியல் குழந்தைகளுக்காக 1 கிமீ வகையை அறிமுகப்படுத்தியுள்ளோம். கௌமாரம் பிரசாந்தி அகாடமி, நிஸ்சார்க் மற்றும் ஹேண்ட்ஸ் ஃபார் யூ பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 60 சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள். மேலும், தமிழ்நாட்டில் முதன்முறையாக, சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர்க்கு பந்தய பிரிவுகள் உருவாக்கப்பட்டு சக போட்டியாளர்களுடன் போட்டியிட உள்ளார்கள், இதில் வெற்றியாளர்கள் மேடையில்
பாராட்டும் ரொக்கப் பரிசுகளும் பெறுவார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் 3 கிமீ, 5 கிமீ மற்றும் 10 கிமீ பிரிவுகளில் இதில் கலந்து கொண்டனர்.
கங்கா மருத்துவமனைகள் மற்றும் சிற்றுளி அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மராத்தான், நமது சமூகத்தில் சமஉணர்வை வளர்ப்பதற்கும், நம்மிடையே உள்ள உண்மையான ஹிரோக்களின் சாதனைகளை கௌரவிக்கும் ஒரு தனித்துவமான முயற்சியையாகும். மாற்றுத்திறனாளி சமூகம் நமது சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைத்து பங்குபெற சரியான உள்கட்டமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், “திறன் என்பது ஊனத்திலிருந்து வேறுபட்டது” என்ற புரிதலை உணர்த்தும் தளமாகவும் இந்த முயற்சி செயல்படும்.!!
என்று டாக்டர் ராஜசேகர் தெரிவித்தார்
Leave a Reply