கோவை மாவட்டம், நிர்மலா மகளிர் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவில் 115 பயனாளிகளுக்கு ரூ.18.60 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி , சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர் வழங்கினர்.
இவ்விழாவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சாபீட்டர் அல்போன்ஸ் , துணைத்தலைவர் கலைமாமணி டாக்டர்.இறையன்பன் குத்தூஸ், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் பீட்டர் ஹரீஷ் தக்கர, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் வா.சம்பத், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முனைவர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், நிர்மலா மகளிர் கல்லூரி செயலாளர் முனைவர் குழந்தை தெரேஸ், முதல்வர் முனைவர் மேரிஃபேபியோலா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பிரவீன்குமார் டாட்டியா, வருவாய்கோட்டாட்சியர் (வடக்கு) கோவிந்தன், முனைவர் இருதயம், சங்கைக்குரிய பிக்கு மௌரியர் புத்தா, கோவை கத்தோலிக்க உயர் மறைமாவட்டம் ஆயர் மேதகு தாமஸ் அக்வினாஸ், இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் எம்.ஏ.இனாபத்துல்லா, ஸ்ரீகோயம்புத்தூர் ஜெயின் மகா சங்கம் தலைவர் பவர்லால்ஜி கோத்தாரி, மாமன்ற உறுப்பினர் பி.எஸ்.சரவணக்குமார் மற்றும் .உம்மர் சாகிப், ஏ.சாதிக் பாட்ஷா, சிறுபான்மையினர் அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையின மக்களுக்கான அரசு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அனைவரும் சமம் என்ற நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் உள்ளவற்றை அலசி ஆராய்ந்து உடனடியாக அதற்கு தீர்வு காண்பது என்பது நம்முடைய முதலமைச்சர் அவர்களின் எண்ணமாக இருக்கின்றது. எனவே, சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது எங்களுடைய கடமை.
இம்மக்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சிறுபான்மையினர் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு இவ்விழா சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது. என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது,
சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு 3வது ஆண்டாக சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அரசின் பல்வேறு நிதிச்சுமைகளுக்கிடையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினர் மக்களுக்கான நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதிகளை வழங்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையின மக்களால் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.
இவ்விழாவில், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பாக நலிவடைந்த 61பெண்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.6.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகள், மூஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பாக நலிவடைந்த 61 பெண்களுக்குதலா ரூ.10,000 வீதம் ரூ.3 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், டாம்கோமூலமாக 15 பயனாளிகளுக்கு ரூ.9.50 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகள், உலமாக்கள் நலவாரியம் சார்பாக 9 புதிய உலமாக்களுக்கு நலவாரிய அட்டைகளும் என மொத்தம் 115 பயனாளிகளுக்கு ரூ.18.60 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள்.மேலும், இவ்விழாவில் கோயம்புத்தூர் மாவட்ட மூஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்துக்கு கோவை அத்தர் ஜமாத் நிர்வாகம் சார்பாக ரூ.2 லட்சம் நன்கொடையாக பீர்முகமது ஆசிக், சையது உசேன் அமைச்சர் பெருமக்களிடம் வழங்கினர். மேலும், ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர் சான்றிதழ் பெற பரிந்துரைக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக ஜி கோயம்புத்தூர் ஜெயின் மகா சங்கத்தை அங்கீகரித்து அதற்கான ஆணையினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பகவர்லால் கோத்தாரியிடம் வழங்கினார்கள்.
Leave a Reply