கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்கள் பேட்டி அளித்த போது
அண்ணாமலை கோவையில் கடந்து மூன்று நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்றனர் இது குறித்து தமிழக அரசு மெத்தனப் போக்கு காட்டாமலும் தேர்தலை காரணம் காட்டாமலும் உடனடியாக சிறுவாணி பில்லூர் அணைகளில் தண்ணீரை பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மேலும் அரசியல் தாண்டி சிறுவாணி தண்ணீரை பெறுவதற்கு கேரளா அரசு உடன் திமுக அரசு முயற்சிக்க வேண்டும்
மேலும் குளங்கள் நீர் வரும் பாதைக்கு மத்திய அரசு பலகோடி நிதிகளை ஒதுக்கினாலும் தமிழக அரசு தமிழக அரசு சரியான முறையில் கையாளுவது இல்லை ஒரு லட்சம் குளங்களை குஜராத் மாநிலங்களில் மக்கள் பங்களிப்புடன் முதலமைச்சராக இருந்தபோது மோடி அவர்கள் செய்து காட்டினார் நமது தமிழகத்தில் அதே போன்ற தண்ணீர் பிரச்சனை வரக்கூடாது என்பதற்கு மோடி அவர்களுக்கு எண்ணம் உள்ளது ஆனால் ஆளுகின்ற அரசு முறையாக செயல்படுத்துவதில்லை அதே போல நேரடியாக குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் ஜல் சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் அத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டும் முறைகேடும் நடைபெற்று வருகிறது இதனால் மத்திய அரசு வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார் தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எப்பவுமே அரசியல் அறம் சார்ந்து இருக்க வேண்டும் ஆன்மீகம் அரசியலும் பிரிக்கக் கூடாது எப்பொழுதெல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ அவர்கள் நேரடியாக ஆதீனங்கள் போல குருமார்களை சந்தித்து அறிவுரைகளை பெற்று செயல்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.
Leave a Reply