நாடளாவிய கல்வி நடைமுறையில் பெரும் மாற்றத்தை சிபிஎஸ்இ (CBSE) கல்வி வாரியம் மேற்கொண்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் வழிகாட்டுதலின் அடிப்படையில், தற்போது 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான ‘ஃபெயில்’ நடைமுறை மீண்டும் அறிமுகமாகிறது.
இதன் பொருளாக, இந்த வகுப்புகளில் மாணவர்கள் 30% மதிப்பெண்களுக்கு குறைவாக பெறும் பட்சத்தில் ‘பெயில்’ என அறிவிக்கப்படும். இதன்மூலம், மாணவர்களின் அடிப்படை திறனை உறுதிப்படுத்தும் நோக்கமே முக்கியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 8ஆம் வகுப்பு வரை “கட்டாய தேர்ச்சி” என்ற முறையே தொடரப்பட்டுவந்தது. எனினும், புதிய கல்விக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலுக்காக இந்த சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நடைமுறை, 2024-25 கல்வியாண்டிலிருந்து முழுமையாக நடைமுறைக்கு வரும். ஏனெனில், தற்போதைய கல்வியாண்டுக்கான தேர்வுகள் ஏற்கனவே முடிந்து விட்டன. அதன்படி, 9ஆம் வகுப்பு வரை பழைய விதிமுறையின் கீழ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், புதிய நடைமுறையின் அமலுக்கு பெற்றோரிடம் எழுதிட்ட ஒப்புதல் கடிதங்களைப் பெறும் பணியிலும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஈடுபட்டுள்ளன.
புதிய மாற்றம் கல்வித் தரத்தை உயர்த்தும் முனைப்பில் மேற்கொள்ளப்படுவதாகவும், இது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அடித்தளத்தை அமைக்கும் நடவடிக்கையாக இருப்பதாகவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply