கோவை: கோவை அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள Teachers Colony பகுதியில் மூன்று குரங்குகள் தொடர்ந்து தொல்லை தருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவற்றில் ஒரு குரங்கு அண்மையில் மூன்று பேரைத் தாக்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்களின் கூற்றுப்படி, ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டு குரங்குகள் அப்பகுதிக்கு வந்தன. சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவது குரங்கும் சேர்ந்து கொண்ட’குரங்குகள் எல்லா விதமான தொல்வைகளையும் தருகின்றன. கதவுகள் அல்லது ஜன்னல்கள் திறந்திருந்தால் வீடுகளுக்குள் நுழைந்து உணவைத் திருடுகின்றன. குப்பைத் தொட்டிகளை கிளறி குப்பைகளை எங்கும் சிதறடிக்கின்றன. தண்ணீர் தொட்டிகளின் மூடிகளைத் திறந்து உள்ளே குளிக்கின்றன. நாங்கள் அவற்றை விரட்ட முயன்றால், அவை எங்களை மிரட்டி தாக்க முயல்கின்றன,’ என்று அப்பகுதி குடியிருப்பாளரான சி. கோபி கூறினார்.
ஒரு குரங்கு ஒரு சிறுவன் உட்பட மூன்று குடியிருப்பாளர்களைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறிநாய்க்கடி நோய் பரவும் அபாயம் குறித்த அச்சம் சமூகத்தின் கவலைகளை அதிகரித்துள்ளதாக மற்றொரு குடியிருப்பாளர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் சில குடியிருப்பாளர்கள் குரங்குகளுக்கு உணவளித்ததால், அவை தொடர்ந்து திரும்பி வந்தன. வனத்துறை குரங்குகளைப் பிடிக்க கூண்டு வைத்திருந்தாலும், குரங்குகள் அதைத் தவிர்த்து வந்துள்ளன. குடியிருப்பாளர்களின் கவலைகளைத் தீர்க்க ஒரு குழு அனுப்பப்படும் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Leave a Reply