கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரி ஆதிவராகநத்தம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த அரவிந்த், தமிழேந்தன், குணால் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றி சிதம்பரம் நோக்கி வந்த கனரக லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த மோதலின் தாக்கத்தில் இருசக்கர வாகனம் லாரியின் அடியில் சிக்கி நொறுங்கியது. இதில் அரவிந்த் மற்றும் தமிழேந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து செய்தி தெரிந்ததும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் உடலை வைத்து கதறி அழுததால் விருதாச்சலம்–கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புவனகிரி போலீசார், சிதம்பரம் டிஎஸ்பி மற்றும் சேத்தியாதோப்பு டிஎஸ்பி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சாலை விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply