முன்னாள் முதல்வரும், பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, அம்மாபேரவை இணை செயலாளரும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர். ஜெயராம், ஏறு பூட்டிய மாட்டு வண்டியில் வீடு வீடாக சென்று மக்களுக்கு தாம்பூலம், சீருடன் அழைப்பிதழ்களை வழங்கினார்.
மேலும், நிர்வாகி களுக்கு “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற லோகோ பொருத்த சட்டை, வேட்டி, மகளிர்களுக்கு பட்டு சேலைகள் உடன் அழைப்பிதழ்களும் வழங் கப்பட்டன.
இந்நிகழ்ச்சி, முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வழிகாட்டுதலின் பேரில், சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துடன் நடைபெற்றது.
வரும் செப்டம்பர் 13ஆம் தேதி, சிங்கா நல்லூர் தொகுதியின் மசக்காளிபாளையம் சாலையில், பாலன் நகர் வளைவு அருகில், எடப்பாடியார் தலைமையில் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பிரச்சாரம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சிங்காநல்லூர் செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, கோவை மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்ட மன்ற உறுப்பினருமான அம்மன் கே. அர்ச்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு வேட்டி, சட்டை, சேலைகளுடன் அழைப்பிதழ்களை வழங் கினர்.
மேலும், மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், கோவை மாநகர மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சிவபிரசாந்த், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சி.டி.சி. ஜப்பார், மகளிரணி மாவட்ட செயலாளர் லீலாவதி உண்ணி, மாணவரணி மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், பீளமேடு துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
சிங்காநல்லூரில் எடப்பாடியாரை வரவேற்க மாட்டு வண்டியில் அழைப்பிதழ் வழங்கிய எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம்



Leave a Reply