கோவை உக்கடம்-சுங்கம் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், அந்த சாலையில் மாநகராட்சி பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளது.
பணிகள் முடிவடைந்த பின்பு அந்த குழிகள் சரியாக மூடப்படாததால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கியுள்ளது. இதனை அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் கந்தசாமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் களத்தில் இறங்கி பொதுமக்களின் சிரமத்தைப் போக்க சாலையில் நடுவே ஏற்பட்ட பள்ளங்களை மண் கொண்டு சீரமைத்தனர்.
பல நாட்களாக மூடப்படாத பள்ளத்தை சீரமைத்த காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply