சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய நடுவர்களும் புறக்கணிப்பு

Spread the love
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய நடுவர்களும் புறக்கணித்துள்ளனர்.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்து விட்டது. இதனால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. ஒருவேளை, இந்தியா அரையிறுதி , இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் அந்த போட்டிகள் துபாயில்தான் நடைபெறும். இல்லையென்றால் இறுதிப் போட்டி லாகூரில் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியாவை சேர்ந்த நடுவர்களும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். சாம்பியன்ஸ் டிராபிக்கான 12 நடுவர்கள் கொண்ட குழுவை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. அதில், இந்தியாவை சேர்ந்த ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் நிதின் மேனன் ஆகியோர் இடம் பெறுவதாக இருந்தது. இந்த நிலையில், குடும்ப நிகழ்ச்சி காரணமாக ஸ்ரீநாத் நடுவர் குழுவில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார். மற்றொரு இந்திய நடுவரான நிதின் மேனனும் சொந்த காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபியில் பணியாற்ற முடியவில்லை என்று கூறி விலகிக் கொண்டார்.

One attachment • Scanned by Gmail