அவதூறு வழக்கில் தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் அவரை கோவை அழைத்து வரும் போது, வாகனம் விபத்துக்குள்ளாகிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்து அவரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் வாகனத்தில் அவரை அழைத்து வந்து கொண்டிருந்தபோது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் வந்த வாகனம் கார் மீது மோதியதாக தெரிகிறது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் மெல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அழைத்து வரப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply