இவர் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நான்காவது தலைவர் என்பதும் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டுள்ள முதல் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், தென்னிந்திய ஜவுளி உற்பத்தி ஆராய்ச்சி கழகம், பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் பொதுச் செயலாளர் செல்வராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து கே.வி.சீனிவாசன் கூறும்போது ஐடிஎம்எப் சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் புள்ளிவிவரங்கள், சர்வதேச ஜவுளி இயந்திரங்களின் ஏற்றுமதி புள்ளி விவரங்கள், சர்வதேச உற்பத்தி செலவு ஒப்பீடு, பருத்தி மாசு அறிக்கை, உலக ஜவுளி தொழில் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.
இதன் உறுப்பினர்கள் சிறப்பு காணொளி கலந்துரையாடலில் பங்கேற்கவும் தொழில்துறை தலைவர்களுடன் சிறப்பு நேர்காணல் மூலம் விவாதம் செய்யவும் வாய்ப்பு அளிக்கிறது. ஜவுளி தொழில் அமைப்புக்கும் அரசுகளுக்கும் இடையே இந்த அமைப்பு பாலமாக விளங்குவதுடன் ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கு உதவும் அமைப்பாக இருக்கிறது என கூறினார்.
Leave a Reply