கோவை சரவணம்பட்டி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 2023ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத் துறையின் என்.ஹெச். பிரிவின் மூலம் மேம்பாலம் கட்டும் திட்டம் வகுக்கப்பட்டது.
இருப்பினும், கோவையில் அமலுக்கு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் சரவணம்பட்டி வழி யாக செல்லும் என்பதால், மேம் பாலம் கட்டும் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இந்த சூழலில், மெட்ரோ திட்டத்தை நிறைவேற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சரவணம்பட்டியில் இரண்டு அடுக்கு மேம்பாலம் ஒன்றை அமைக்க முடிவு செய்
தது. இதில் கீழ் அடுக்கில் பொதுவாக வாகனப்போக்குவரத்து நடைபெறும்; மேலடுக்கு மெட்ரோ ரயிலுக்காக ஒதுக்கப்படும்.
தொடக்கத்தில், இரண்டு அடுக்குகளுக்கும் தேவையான தூண்கள் மெட்ரோ நிறுவனத்தால் அமைக்கப்படும் என திட்டமிடப்பட்டது. அதன் பின்னர் கீழ் அடுக்கு பணிகளை நெடுஞ்சாலைத் துறையும், மேல் அடுக்கு பணிகளை மெட்ரோ நிறுவனமும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.
இப்போது இதில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றத்தின் படி, இந்த இரண்டு அடுக்குப் பணிகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமே முழுமையாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் ஒருங் கிணைப் பையும் செயல் திறனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் சிறப்பாக அமைய மெட்ரோ நிறுவனம் முழுமையாக பொறுப்பேற்க, நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, இதற்கான வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது.
சரவணம்பட்டி பகுதியில் இரண்டு அடுக்கு மேம்பாலம் திட்டம் –உள்ளே நுழைந்த சென்னை மெட்ரோ

Leave a Reply