சபரிமலை சீசனை முன்னிட்டு கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு கோவை வழியாக வந்தே பாரத் ரயில்கள்

vande bharat
Spread the love
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து கோவை வழியாக சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு கோவை வழியாக சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த இரண்டு ரயில்களில் ஒரு ரயிலானது வரும் 15, 17, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, போத்தனூர்,  பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக மாலை 7.20 மணிக்கு கோட்டயத்தை சென்றடைகிறது. இதேபோல், மற்றொரு ரயில் கோட்டயத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.இந்த இரண்டு வந்தே பாரத் ரயில்களிலும் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.