கோவை புறநகர் வடக்கு மாவட்ட அவினாசி வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் படியும், முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆலோசனையின்படி நடைப்பெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அவினாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் வேலுச்சாமி, பூத் கமிட்டி பொறுப்பாளர் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப செயலாளர் சஞ்சய் , மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் லோகேஷ் தமிழ்செல்வன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் நாசர் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்



Leave a Reply