கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி- 09.07.2024 முதல் 10.07.2024 வரை இரண்டு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியானது,வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுகிறது.
இதில் சாம்பார் பொடி, சூப் மிக்ஸ், முருங்கை பொடி, பிஸ்கட், காளான் பொடி,ஊறுகாய், அடை மிக்ஸ்,பருப்பு பொடி, நூடுல்ஸ், பிரியாணி மிக்ஸ், பிழிதல் தொழில் நுட்பம் ஆகியவை கற்பிக்கப்பட உள்ளது.
தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள் ஆகியவையும் விரிவாகக் கூறப்படும்…
ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி முதல் நாளன்று ரூ.1,770 செலுத்தி கலந்துக் கொள்ளலாம்.
Leave a Reply