கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த 29ஆம் தேதி மாலை 6:50 மணிக்கு கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை செய்தனர் .மேலும் சோதனை முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்தது வதந்தி என தெரியவந்ததை அடுத்து விமான நிலைய தலைமை பாதுகாப்பு அலுவலர் மேத்யூ என்பவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Leave a Reply