கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இரண்டு தரப்பினராக பிரிந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
காங்கிரஸ் தேசிய குழு நிர்வாகி வேணுகோபால், கேரளாவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்,ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை விமான நிலையம் வந்தர். டெல்லி செல்வதற்காக வந்த அவரை, கோவை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்க சென்றனர்.
மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும், செல்வம் தலைமையில் ஒரு குழுவும் வேணுகோபாலை வழியனுப்ப விமான நிலையத்திற்கு சென்றனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம், இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே வந்த போது மயூரா ஜெயக்குமாருக்கும், செல்வத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் வாக்குவாதம் உச்சத்திற்கு செல்லும்போது முகம் சுழிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி வசைப்பாடி இருக்கின்றனர். இதனால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்

Leave a Reply