கோவை மாவட்ட தொழில் அமைப்புகளில் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜேம்ஸ் தலைமையில் நூற்றுகணக்கான தொழில் முனைவோர்கள் டாடாபாத்தில் உள்ள மின்சார வாரியத்தின் கோவை மாவட்ட தலைமை மின்பொறியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கோவை மாவட்ட மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதியில் 18 கிலோ வாட்டுக்கு குறைவான மின்இணைப்பு பெற்று குறுந்தொழில் முனைவோர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜாப்பாடர்கள் பெற்று தாங்களும் இயந்திரங்களில் பணி செய்தும், தங்கள் சக்திக்கு உட்பட்டு குறைந்த பட்சம் 5 தொழிலாளிகள் வரை வேலை வழங்கி தொழில் நடத்தி வருகின்றனர்.
மேற்கண்ட குறுந்தொழில் நிறுவனங்கள் மாதம் 1000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய் வரைக்கான மின்சாரத்தை பயன்படுத்தி தங்கள் பயன்பாட்டுக்கான கட்டணத்தை செலுத்தி வந்தனர். தங்களின் மின்சார வாரியத்துக்கான மின்கணக்கீட்டாளர் கடந்த மாதம் மின்பயன்பாட்டுக்கான கட்டணத்தை கணக்கிடும் போது 2000 ரூபாய் வரை மின்சாரத்தை பயன்படுத்திய குடிசை தொழிலாக இயங்கி வரும் குறுந்தொழில் நடத்தி வரும் தொழில் முனைவோர்களுக்கு அபராத தொகையாக (பவர் பேக்ட்) காரணம் காட்டி 150% சதம் வரை விதித்து உள்ளனர்.
15,000 ரூபாய் வரைக்கும் கஷ்டப்பட்டு தானே நின்று தொழில் முனைவோர்கள் மேல் பயன்படுத்தி மின்கட்டணம் 2000 இருக்கும் பட்சத்தில் 3000 ரூபாய் அபராதம் விதித்து அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கி உள்ளது, உடனடியாக இந்த அபராத விதிப்பு நிறுத்துவதுடன் அபராதமாக வசூலித்த தொகையினை சம்மந்தப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு திருப்பி கொடுத்து உதவிட வேண்டுகிறோம். மின்சார வாரியம் 18 கிலோவாட் கீழ் மின்இணைப்பு பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தி மின் சேதாரத்தை தவிப்பதற்கான வழிகாட்டி சேதாரத்தை தவிரக்க கேட்டுக்கொள்கிறோம்.
நமது மண்டலத்துக்கு உட்பட்ட மின்பகிரமானத்தில் கிட்டதட்ட 50,000க்கும் மேல் 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரசு கடந்த ஆண்டு 3 B யில் உள்ள மின்இணைப்புகள் 3 A1 மின்இணைப்பாக மாற்றி கொடுக்க ஆணைபிறப்பித்தும் இன்று வரை நமது மண்டலத்தில் அமுல்படுத்தாமல் உள்ளது. இந்த டாரிப்பில் ஒவ்வொருவராக மின்இணைப்பு தாங்களாக முன் வந்து மாற்றுவதில் பல நெருக்கடிகளும் சிக்கலும் உள்ளது.
தங்களின் வாரியத்தின் மூலம் 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர்களுக்கு சாப்ட்வேரில் மாற்றம் செய்து உடனடியாக 3A1 மின்இணைப்புக்கு மாற்றி கொடுத்திட வேண்டுகிறோம்.” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோவை மாவட்ட தொழில் அமைப்புகளில் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் தலைமை மின்பொறியாளரிடம் மனு

Leave a Reply