கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

Spread the love

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் இது நான்காவது முறை என்ற வகையில், இன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். வாகன நிறுத்துமிடம், அலங்காரச் செடிகள், காம்பவுண்ட் சுவர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கவனமாகச் சோதிக்கப்பட்டது.

முந்தைய மூன்று முறை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது வெளிநாட்டில் இருந்து மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்டுவரும் நிலையில், சைபர் கிரைம் போலீசார் யார் இதற்குப் பின்னால் உள்ளனர் என்பதை கண்டறிய தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.