கோவை மாவட்டம் கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சிங்கை ஜி.ராமசந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், டி கே.அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சிறப்புரையாற்றுகையில், “தேர்தல் என்ற போரிலே எதிரிகளை ஓட விரட்டி வெற்றி கொடி காட்டுவோம். பத்திரிக்கை, ஊடகங்கள் 24 நாட்களுக்கு முன்பு அதிமுக கூட்டணி பலவீனமான கூட்டணி. யாரும் இடம்பெறவில்லை. அது பலவீனமாக இருக்கிறது என்று எழுதினார்கள். ஆனால் இப்பொழுது அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்கிறது.
10 நாட்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஒவ்வொரு மாவட்டம் முழுவதும் போய்க் கொண்டிருக்கிறோம். வேட்பாளரை ஆதரித்து சென்று கொண்டிருக்கிறோம். எங்கே சென்றாலும் பெரிய மக்கள் வெள்ளம் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதை பார்த்து தான் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். உளறிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியின் வெற்றி வேட்பாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் நிறுத்தியிருக்கிறோம். தேர்தல் போரிலே இங்கு கேப்டனாக நிறுத்தியுள்ளோம். கேப்டன் கட்சியும் நம்மிடையே உள்ளது.
ஆக ஒவ்வொரு சிப்பாய்களும் எதிரிகளை போர் என்று தேர்தலில் நாம் நிறுத்தியுள்ள வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
சிங்கை ஜி.ராமசந்திரன் உழைப்பாளி, படித்தவர். அவரது தந்தை ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நன்கு அறிமுகமானவர். இந்த மண்ணின் மைந்தர். இவர் வெற்றி பெற்று வந்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்புள்ளம் படைத்தவர். மத்தியிலிருந்து என்னென்ன திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அதை எல்லாம் போராடி வாதாடி உங்களது குரலாக ஒலிக்கச் செய்வார், திட்டங்களை பெற்று தருவார்.
ஆகவே இவருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நமது சின்னம், எம்ஜிஆரின் சின்னம், அம்மாவின் சின்னம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தேடித் தாருங்கள்.
இந்த மாவட்டம் அதிமுகவின் கோட்டை. இந்த கோட்டையில் யாராலும் உடைக்க முடியாது. இது அதிமுகவின் எஃகு கோட்டை. 2021 சட்டமன்றத் தேர்தலில் பத்துக்கு பத்து வெற்றி கண்ட மாவட்டம் கோவை மாவட்டம். நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி தந்த மாவட்டம் கோவை மாவட்டம். அப்படி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாவட்டத்தில் நம்முடைய வெற்றி வேட்பாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரன் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அது சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. அகில இந்திய அளவிலே பேசக்கூடிய வெற்றியாக கோவை நாடாளுமன்ற தொகுதியில் பெற வைக்க வேண்டும்.
கோவை மாவட்ட வாக்காளப் பெருமக்கள் 2021 இல் அற்புதமான வெற்றியை தந்தீர்களோ, அதைவிட பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையை வெற்றி வேட்பாளருக்கு தாருங்கள்.” என்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில் “இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுது இந்த நாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார் என்று ஒட்டுமொத்த குரலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்டத்திற்கு அத்தனை திட்டங்களையும் கேட்ட திட்டங்களை எல்லாம் தந்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. செய்ய முடியாத திட்டங்களை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றியுள்ளார்.
மூன்று வருடத்தில் திமுக ஒரே ஒரு திட்டத்தையாவது நிறைவேற்றியதா. இங்கு திமுக அதிமுகவுக்குத்தான் போட்டி. பாஜக போட்டியிலேயே இல்லை. 5% ஓட்டு வைத்துள்ளதால் அவர்கள் பெரிய செல்வாக்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள். அவர்கள் எங்களோடு போட்டிக்கு வர முடியாது. அதிமுக பெரிய கட்சி. 17 லட்சம் உறுப்பினர்களை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். ஜெயலலிதா ஒன்றரை கோடி உறுப்பினர்களாக வளர்த்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி 2 கோடி கொண்ட உறுப்பினர்களாக உருவாக்கியுள்ளார் அதிமுக யாரும் போட்டிக்கு வர முடியாது நமக்கும் திமுகவிற்கும் தான் போட்டி. மூன்று ஆண்டுகள் விடுபட்ட அத்தனை திட்டங்களையும் நிறைவேற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.” என்று பேசினார்
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், நமது அம்மா நாளிதழின் ஆசிரியரும், பேராசிரியருமான கல்யாணசுந்தரம், செய்தி தொடர்பாளர்கள் ஏ.எஸ்.மகேஸ்வரி, அப்ஷரா ரெட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகி சிடிசி ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply