கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து சிக்னல்களில் ஆங்காங்கே மேற்கூரை அமைத்தும், பல்வேறு இடங்களில் இலவச நீர்மோர், தர்பூசணி போன்ற பழம் வகைகள் பொது மக்களுக்கு கொடுத்தும், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அடுத்து போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் முதல் கட்டமாக 36 போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி தலைக்கவசங்களை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வழங்கினார்.
எங்க தலைக்கவசத்தின் விலை 15 ஆயிரம் ரூபாய் என்றும், இதனை இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் இரண்டு மணி நேரம் பயன்படுத்தலாம் என்றும், இது 5 டிகிரி வெப்பநிலையை குறைக்கும் என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறும் போது :
இந்த தலைக்கவசம் வெயில் காலத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் வெள்ளலூர் பகுதியில் புதிதாக கட்டி வரக்கூடிய பேருந்து நிலையம் அருகே கடந்த 11ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக நான்கு பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply