​கோவை பார்க் கல்விக் குழுமங்களில் இரண்டு நாள் கலை திருவிழா ஜீரோ -ஜி

park institutions
Spread the love

கோவை பார்க் கல்விக் குழுமத்தின் பொறியியல் கல்லூரிகளான பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுற்பக் கல்லூரி மற்றும் பார்க் தொழில்நுட்ப கல்லூரிகளின் ​இரண்டு நாள் கலை திருவிழா ஜீரோ -ஜி நடைபெற்றது.
இந்த கலைவிழாவில் 21 கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பல போட்டிகளில் பங்கெடுத்தனர். ப்ராஜெக்ட் எக்ஸ்போ, குறும்படம், வரைதல், மின் விளையாட்டு, புகைப்படம் எடுத்தல், குறியீடு பிழைத்திருத்தம், குறியீடு மற்றும் பதில், அனிம் வினாடி வினா, ஃபேஷன் ஷாப் ஆட் காஸ்ப்ளே, பாடுதல், மைம், ரீல்ஸ் மேக்கின் போன்ற 30க்கும் மேலான போட்டிகள் நடைபெற்றன.
முதல் நாள், திரைப்படத்துறையில் சாதித்து வரும் பின்னணி பாடகர்கள் ஆதித்யா ஆர்.கே மற்றும் ரேஷ்மா எஸ் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் நிறைவு விழாவுக்கு பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர். அனுஷா ரவி தலைமை தாங்கினார். கமாண்டர் அரவிந்தன் ஆர்.பி.(ஓய்வு), இந்திய கடற்படை மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் கௌரவ விருந்தினராகவும், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
டாக்டர் . அனுஷா ரவி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி, இந்த மாலை வேளை மாணவர்கள் உங்களுக்கானது ஆகவே கொண்டாடி மகிழுங்கள் என்று வாழ்த்தினார். இந்த அற்புதமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜீரோ -ஜி குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். நாம் இரண்டு ஆண்டுகளாக ராணுவம் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கி வரும் கல்வி கட்டண சலுகையை மீண்டும் அறிவிக்குமாறு கமாண்டர் அரவிந்தன் அவர்களை கேட்டுக் கொண்டு வெளியிட்டார்.
தனது உரையின் போது, கமாண்டர் அரவிந்தன் தற்போது உள்ள போர் சூழ்நிலையில் ராணுவ வீரர்களின் நிலைமைகளை விளக்கினார், மேலும் அவர் தான் உண்மையான ஹீரோக்கள் அவர்களை மதிக்குமாறும், எல்லையில் நமது நாட்டைக் காத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும் நலமுடன் திரும்பி வரவும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரியா வாரியா்ர உடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வு உற்சாகமாகவும் சுவையானதாகவும் அமைந்திருந்தது.இந்தக் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மேலும் இந்த கலை விழாவின் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டது.