கோவை மாவட்ட பாஜக தலைவராக பதவி வகித்து வந்த பாலாஜி உத்தம ராமசாமி பதவியை ராஜினாமா செய்து பாஜக மாநில தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோயமுத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாலாஜி உத்தம ராமசாமி மாவட்டத்தினை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணி ஆற்றி வந்தார். தற்பொழுது சொந்த காரணங்களுக்காக பாஜகவின் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார்.
அவருடைய கடிதத்தினை ஏற்றுக் கொண்டு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். கோயமுத்தூர் நகர் மாவட்ட பொது செயலாளர் ஆக பணியாற்றி வந்த ரமேஷ்குமார் புதிய கோவை மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்” என்று செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply