, ,

கோவை தொல்லியல் அருங்காட்சியகம்

museum
Spread the love

கல்வெட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவைகள் நமக்கு வரலாற்று பெட்டகங்கள். இவைகளின் மூலம் நமது மூதாதையர்களின் வாழ்வும், அவர்களின் நெறிமுறைகளும், அவர்கள் காட்டிய வழியும் நமக்கு பயன் தக்கவை. உலகம் தோன்றிய காலம் தொட்டே வரலாறுகள் வரையப்பட்டுள்ளன.
சில நூற்றாண்டுகளில் வரலாறு
கள் எழுதப்படாமல், மறைக்கப்பட்டு வந்துள்ளன. இருப்பினும் அறிவார்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் தாங்கள் கேட்ட, தகவல்களையும் நேரில் கண்ட காட்சிகளையும், சம்பவங்களையும் கல்வெட்டுக்கள் வடிவிலும் ,பட்டயங்களிலும் உள்ளதால் தான் நாம் அவற்றின் மீது ஆர்வம் கொண்டு படிக்கவும், காணவும் செய்கிறோம்.
கல்வெட்டுகளில் கோவை
கோவை மாவட்டத்தில் அதிகமாக ஆயிரத்து 500 கல்வெட்டுகள் பல பகுதிகளில் உள்ளன.பேரூர்,உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் “கோவன் புத்தூர்” என்ற கோவை மண்ணின் பழம் பெயர் இடம் பெற்றுள்ளன.
சோழர்கள்
நம் மண்ணை சேர மன்னர்களில் கோர்க்கண்ட வீர நாராயணன், கோர் கண்டன் ரவி கோதை ஆகியோரின் கல்வெட்டுக்கள், அவர்களுக்குப் பின் கங்கர்கள் கொங்கு நாட்டை ஆண்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
பின் சோழர்களின் ஆட்சி மலர்ந்தது. முதலாம் ஆதித்தன் மகன் புராந்தகனின் கல்வெட்டுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. கொங்குச் சோழர்கள் நம் கொங்கு நாட்டை கிபி 1400 முதல் 1303 வரை ஆண்டுள்ள னர்.
கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தொல்லியல் துறை அகல் வைப்பகத்தில் பற்பல வரலாற்று சான்றுகளும், பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோவை காளிமங்கலம், இருகூர், போளுவம்பட்டி, மற்றும் திப்பம்பட்டி ஆகிய ஊர்களில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழி, வெவ்வேறு வகையான பல காலத்தைச் சேர்ந்த மட்கலன்கள், மண் குடுவை மூடி, மூக்குடன் கூடிய சின்னம், மண் பானை தாங்கி, மூன்று கால்களை உடைய ஜாடி ஆகியவையும்,ஆந்திர மட்பாண்ட சின்னம், மிகவும் பழமையான குழி பணியாரச் சட்டியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கிபி முதல் நூற்றாண்டில் ரோமானியர்கள் பயன்படுத்திய மது குடுவை, பல வகையான சுடுமண் பொம்மைகள், குறிப்பாக விநாயகர், சதுரங்க காய்கள்,பல வடிவங்களில் காதணிகள், விளக்குகள், புகைப்பான், பல வடிவங்களில் சுடுமண் மனித உருவங்களும், பொம்மைகளும் காட்சியில் இடம்பெற்றுள்ளன.
பழமையான கோட்டை மட்டும் கொத்தளங்களில் வெவ்வேறு அளவுடைய பெரிய பெரிய செங்கற்கள்,கல்லால் செய்யப்பட்ட கல் உருண்டை, கல் கத்தி,பழமையான அம்மிக்கல் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சியில் அனைவரையும் கவர்கின்றனர்.