, , , ,

கோவை சிறையில் கொல்லப்படுவேன்- சவுக்கு சங்கர் தடாலடி

சவுக்கு சங்கர்
Spread the love

கோவை சிறையில் கொல்லப்படுவேன்!!
கோவையில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் தடாலடியான பேச்சு.

திமுக அரசின் மீது கடுமையான விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் மீது தற்போது, குண்டர் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகளை போட்டு காவல் துறையினர் சிறையில் அடைத்து உள்ளனர். இதற்கிடையில் ,அவரது வழக்கறிஞர் சவுக்கு சங்கரின் கைகள் மற்றும் உடல்களில் காயம் இருப்பதாக குற்றம் சாட்டப் பட்ட நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் அவரது கைகளில் கட்டு போடப்பட்டு உள்ளது.

இதைதொடர்ந்து ,சவுக்கு சங்கர் சிறை மற்றும் காவல்துறையினரால் இன்று காலை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ,இன்று நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜராக உள்ளதால், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கரின் வலது கையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது ,மீண்டும் வலது கையில் மாவு கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்டார்.அப்போது சவுக்கு சங்கர் கோவை சிறையில் கொல்லப்படுவேன் என தடாலடியாக கூறினார்.