கோவை உக்கடத்தில் அசோக சக்ரா சிங்கம் சிலையை நிறுவிய ஆர்.கோல்டு நிறுவனம்​

ashok chakra
Spread the love

கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர்.

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில், கோவை ஆர்.கோல்டு நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதன் முறையாக அசோகச் சக்கரம் சிங்கம் தலை கொண்ட கம்பீரமான சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சிலையை திறந்து வைத்தார்.

நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையை பறைசாற்றும் இந்தச் சிலை திறப்பு விழாவில், நமது பாரம்பரிய கலைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பரதநாட்டியம், கதக்களி மற்றும் புனித சிறப்பு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்ததுடன், தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது.

இந்தச் சிலை திறப்பு விழாவில் ஆர். கோல்டு நிறுவனர் ஆர்.ரங்கசாமி, தனியார் நிறுவன உரிமையாளர் மகாபிரபு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் பராமரிப்பை ஆர்.கோல்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது