கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் அதிகரித்துள்ளது.
வெயின் அதிகரிப்பால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. அந்த தீ அருகே இருந்த காய்ந்த இலைகளில் பரவி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு துணிகளை கொண்டும் தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு மின்மாற்றியில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
Leave a Reply