, , , , ,

கோவை அருகே வழக்கறிஞர் வெட்டி கொலை…..

advocate
Spread the love

கோவை அருகே வழக்கறிஞர் வெட்டி கொலை – உடலை கைப்பற்றிய போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த மைலேரிபாளயத்தில் வழக்கறிஞர் எஸ். உதயகுமார் (48) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி டாக்டர் நித்யாவள்ளி, கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை, பொள்ளாச்சி செல்ல திட்டமிட்டிருந்த உதயகுமார், தனது காரில் வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால், மைலேரிபாளயம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே அவரது உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்து மற்றும் மார்பில் பல காயங்கள் இருந்தன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்த உதயகுமாரை தடுத்து நிறுத்தி அவரை காரில் இருந்து இறங்கச் சொல்லி கோழிப்பண்ணை அருகே கொண்டு சென்று கத்திகளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். “இந்த வழக்கில் முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. தனிப்படை போலீசார் விரைவில் கொலையாளிகளை பிடிப்பார்கள்” என்று எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்தார்.