கோவையில் 10 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல், டெங்கு பன்றி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் பத்து பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்குபின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply