, ,

கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

s p velumani
Spread the love
கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ஆறுதல் தெரிவித்ததுடன், நிதி உதவிகளையும் வழங்கினார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டுக்கல் பகுதியை சேர்ந்த  தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் அப்பகுதியில் இருட்டில் நின்று கொண்டு இருந்த யானை திடீரென தேவராஜை தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். சனிக்கிழமை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, உயிரிழந்த தேவராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் நிதி உதவியையும் வழங்கினார் .
மேலும் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியை சேர்ந்த  கார்த்திக் 24 வயது இளைஞர் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினருடன் இணைந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென யானை கார்த்திக்கை தாக்க தொடங்கியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், மகனை இழந்து வாழும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியையும் வழங்கினார்.