மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகின்றார். இத்னையடுத்து கோவையில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ஒன்பது பேர் கொண்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில்
கோவை – அண்ணாமலை (மாநில தலைவர்)
நீலகிரி – எல்.முருகன் (மத்திய அமைச்சர்)
கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன் (முன்னாள் மத்திய அமைச்சர்)
தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன் (முன்னாள் ஆளுநர்)
தூத்துக்குடி – நயினார் நாகேந்திரன் (நெல்லை எம்.எல்.ஏ.)
வேலூர் – ஏ.சி. சண்முகம் (முன்னாள் அதிமுக எம்பி)
பெரம்பலூர் – பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி)
மத்திய சென்னை – வினோஜ் பி. செல்வம்
கிருஷ்ணகிரி – நரசிம்மன்
ஆகியோர் போட்டியிடவுள்ளனர். கோவையில் திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுவதால் கோவையில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
Leave a Reply