கோவை போத்தனூர் – செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
உடனே அவர்கள் சுந்தராபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கோவை கோண வாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (24) என தெரியவந்தது. அவர் மது அருந்தும் பழக்கமுடையவர் என்றும், கடந்த சில நாட்களாக முதுகுவலி இருப்பதாக வீட்டில் தெரிவித்திருந்ததாகவும் போலீசார் கூறினர்.
இரண்டு நாட்களாக காணாமல் போன நிலையில், இன்றோ அவரது உடல் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது உடல்நிலை கோளாறால் உயிரிழந்தாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு மரணக்காரணம் தெளிவாக தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.



Leave a Reply