மார்ச் 18 ம் தேதி கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் வருகிற 18-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்துள்ள நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
மார்ச் 18ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதாலும் இதுவரை கோவையில் எந்த ஒரு ரோட் ஷோ நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கவில்லை என்பதாலும் பிரதமருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பதாக மாநகர காவல்துறை சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது
இதனிடையே பாஜக மாநில பொதுசெயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் பாஜக வினர் பிரதமருக்கு பாதுகாப்பு வேண்டுமென காவல் ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பாஜக சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மார்ச் 18 ம் தேதி கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது
Leave a Reply