கோவையில் பா.ஜ.கவுக்கு பிரமாண்ட அலுவலகம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார்

Spread the love

கோவை மாவட்டத்துக்கு வரும் 25ஆம் தேதி மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தரவுள்ளார். அப்போது, கோவையில் கட்டப்பட்டு உள்ள பாஜகவின் புதிய இரண்டு மாடி கட்டடத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.

புதிய கட்டடத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு பெரிய அரங்கமும் சிறிய அளவில் மற்றொரு கூட்ட அரங்கமும், மாவட்டத் தலைவர், நிர்வாகிகளுக்கு தனி அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.அமித்ஷாவை வரவேற்பதற்காக கோவை மாவட்ட பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.பிப்ரவரி 26ஆம் தேதி காலை பீளமேடு அருகே எல்லை தோட்டம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கோவை மாநகர் பாஜக தலைமை அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, பாஜகவினர் மத்தியில் அமைச்சர் உரையாற்ற உள்ளதாகவும் தெரிகிறது. இதற்காக அங்கு சிறிய அளவில் மேடை மற்றும் பந்தலும் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, நயினார் நாகேந்திரன் எம்.ல்.ஏ , பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி , மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் பங்கேற்கின்றனர்.