கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நாட்டிய நிகேதன் சார்பில் கல்லூரி மாணவிகள் இணைந்து நடத்திய கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தனர். தொடர்ந்து நாட்டிய நிகேதன் குழுவினரின் கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20 நாட்டிய கலைஞர்கள் ஒன்றாக இணைந்து நடன வடிவில் கர்ணனின் வாழ்க்கை சரித்திரத்தை நடித்து காண்பித்து காண்போரை பிரமிக்க வைத்தனர்.
இது குறித்து நாட்டிய நிகேதன் பள்ளியின் நிறுவனர் மிருதுளாராய் செய்தியாளர்களிடம் கூறுகையில் இதுவரை 1000 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்களை உருவாக்கியுள்ளதாகவும், இந்த நடன பள்ளியின் மூலம் நடனக் கலைஞர்களுக்கு தேசிய அளவில் மட்டுமல்லாது உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற கர்ண சரித்திர நாட்டிய நிகழ்ச்சி

Leave a Reply