,

கோவையில் தெரு நாய்களுக்கு ஒளிரும் பட்டைகளை ஒட்டிய தன்னார்வலர்கள்

straydogs
Spread the love
கோவை மாநகரில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாய்கள் குறித்த கணக்கெடுப்பு பணி தற்போது நடைபெற்று முடிந்து, நாய்கள் கருத்தடை மையமும் புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது.  ஆனாலும் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், சாலைகளில் குறுக்கே திரியும் தெரு நாய்கள் மீது மோதும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனர்.

இந்நிலையில், சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி வருகின்றனர். இதன் மூலம் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வரும் நாய்களை சுலபமாக அடையாளம் காண முடியும். மேலும், இதன் மூலம் தெரு நாய்களால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.