கோவை கொடீசியா மைதானத்தில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, முதல் கட்டமாக நடைபெற்ற,கோவை நாடாளுமன்ற தொகுதியின் பரப்புரைக் கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில், நாடாளுமன்றத் தேர்தல் 2024, “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்- பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில், சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுக்குட்டி, பனப்பட்டி தினகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜ், கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகியவைகளுக்கு உட்பட்ட அனைத்து மாவட்டக் நிர்வாகிகள், தலைமை நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்
Leave a Reply