, , ,

கோவையில் தமிழ்ப்புதல்வன் திட்டதைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் …..

mks
Spread the love

அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ‘தமிழ் புதல்வன்’ என்கிற திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் மாதம் 1000  ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததுது. இந்தத் திட்டத்தை கோவை அரசு கல்லூரியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை பெறுவார்கள். இதற்காக ரூ. 360 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.