கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ், மனைவி மற்றும் குழந்தைகளுடன் மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று, குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு மாணிக்கராஜ் வெளியே சென்றிருந்த நிலையில், இரண்டாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
திடீரென அங்கு இருந்த வீட்டின் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply