,

கோவையில் சமத்துவ தீபாவளி கொண்டாட்டம்

mohammad Rafi
Spread the love

சாதி, மத பாகுபாடின்றி கலந்துகொண்டு கொண்டாடிய தீபாவளி பண்டிகையில் தூய்மை பணியாளர்கள், மாற்று திறனாளிகள், ஏழை பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவி

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது . இந்த நிலையிலே, சாதி மத பேதமின்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் சமத்துவ தீபாவளி கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சாதி மத பேதமெனும் நரகாசுரனை அளிக்கும் சமத்துவ தீபாவளி என்ற அடிப்படையில் இந்த பண்டிகை கொண்டாடினர். பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த விழாவில், மாநில ஒருங்கிணைப்பாளர் எம். எம். ராமசாமி, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி, கோவை மாவட்டத்தின் தலைவர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த சமத்துவ தீபாவளி நிகழ்சியில் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள் இனிப்புகள் வழங்கினர். ஏழை பெண் குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கினர்.

மாற்றுத்திறனாளிகள் ஏழை எளிய மக்கள் உள்ளிட்டோருக்கு புத்தாடைகள் இனிப்புகள் உள்ளிட்டவைகளை வழங்கினர் . சமத்துவ தீபாவளி தொடர்பாக பேசிய விழா ஒருங்கிணைப்பாளர்கள், 15 வருடமாக சமத்துவம் மதநல்லிணக்கம் நிலைநாட்டு வகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு சமத்துவ தீபாவளி, சமத்துவ கிறிஸ்துமஸ், சமத்துவ ரம்ஜான் வருவதாக தெரிவித்தனர். நாட்டில் மதங்கள் வேலாயினும் மனம் ஒன்று என தெரிவித்த அவர்கள், வேற்றுமையில் ஒற்றுமையுள்ள இந்தியாவில் அனைவரும் சகோதரத்துவத்துடனும், மத நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்றும், அதன் அடிப்படையிலேயே சாதி பேத பாகுபாடின்றி சமத்துவ தீபாவளியை கொண்டாடுவதாக தெரிவித்து இருக்கின்றனர் . சாதி மத பேதம் என்னும் பிளவுவாத பாகுபாடு அரசியல் நரகாசுரனை அழிக்கும் வகையில், சமத்துவ தீபாவளி கொண்டாடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.