கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பால் கம்பெனி கிளை சார்பாக 12″ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்கு பூஜை மற்றும் அன்னதான பெருவிழா நடைபெற்றது.
இதில் சபரிமலை போலவே 18 படிகள் அமைத்து கோயில் எழுப்பி ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தபடுகிறது மேலும் சபரிமலை முன்னாள் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தலைமையில் ஐயப்பனுக்கு பூஜை செய்யப்பட்டது.
இது குறித்து ஐயப்பன் சேவா சங்க நிர்வாகிகள் கூறியதாவது, “12 ஆண்டுகளாக இங்கே சிறப்பான முறையில் வழிபாடுகள் நடத்தப்படுகிறது இந்த முறை சபரிமலை போலவே 18 படிகளை அமைத்து கோவில் ஏழுப்பி ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தபடுகிறது. ” என்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கையில் விளக்கை ஏந்தியபடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் ரதத்தின் முன்பாக நாதஸ்வரம், உடுக்குப்பாட்டு, தாலபொலி, சிங்காரி மேளம், தையம், பூக்காவடி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் சபரிமலை…..

Leave a Reply