கோவை மாநகராட்சி 86வது வார்டில் குப்பை வண்டி ஓட்டும் ஓட்டுநர் சபரிமலை யாத்திரை சென்றதை அடுத்து பல நாட்களாக வீடுகளிலிருந்து குப்பைகள் எடுக்கும் பணி நடைபெறாமல் இருந்தது.
இதனை அறிந்த மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் அன்பு நகர் பகுதியில் உள்ள வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகளை பெறுவதற்கு குப்பைகள் எடுக்கும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை பெறும் பணியில் ஈடுபட்டார். மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீரின் இந்த செயல் வார்டு மக்களின் பாராட்டை பெற்றது.
Leave a Reply