கோவை காவல்துறை பயிற்சி பள்ளி அருகில் உள்ள மாநகர ஆயுதப்படை வளாகத்தில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவல் ஆளினர்கள் குடும்பத்தாரின் நலன் கருதி அவர்களது குழந்தைகள் விளையாடுவதற்கான புதிய சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவர்கள் பூங்காவை கோவை மாநகர் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், பங்கேற்றனர். இதில் குழந்தைகளை விளையாடுவதற்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் உற்சாகத்துடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.
Leave a Reply