, , ,

கோவையில் காட்டெருமை தாக்கி வனக் காவலர் உயிரிழப்பு

bison
Spread the love

கோவையில் காட்டெருமை தாக்கி வனக் காவலர் அசோக் குமார் உயிரிழந்த சம்பவம் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10ஆம் தேதி மாலை, தடாகம் வன எல்லைக்குள் உள்ள தோலம்பாளையம் பகுதியில், விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒரு காட்டெருமையை விரட்டுவதில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த முயற்சியின் போது, அசோக் குமாரை அந்த காட்டெருமை தாக்கியதால், அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, சீலியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த பிறகு, இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *