, ,

கோவையில் ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவை சேர்ந்தவரை பிடித்த மக்கள்

bribe
Spread the love
கோவை துடியலூர் சுப்பிரமணியம் பாளையத்திலுள்ள 15 வது வார்டு  பொது மக்களுக்கு தி.மு.க வினர் பணம் கொடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஜகவினர், பணம் கொடுத்துக்கொண்டிருந்த ஒருவரை  பிடித்தனர். மேலும் கூட வந்த இரண்டு பேர் தப்பினர். பிடிபட்டவரிடம் பாஜகவினர் விசாரித்ததில் தனது பெயர் மனோஜ் ( 23) எனவும், திமுகவைச்சேர்ந்த சம்பத் ஓட்டுக்கு பணமளிக்க சொன்னதால், பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் பாஜகவினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மனோஜை துடியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக , பணம் கொடுக்க வைத்திருந்த  42, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். துடியலூர் காவல் துறையினர் சி எஸ் ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.