, , ,

கோவையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு…

cbe collector
Spread the love

இந்தியாவின் 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மொத்த கருவள விகிதம் 3.1லிருந்து 2.1 என்ற சதவீதத்துக்கும் குறைவாக குறைக்கப்பட்டிருக்கிறது.நம் நாட்டின் குறிக்கோளான மக்கள் தொகையை நிலைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணியினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம் அதுவே வளா்ந்த இந்தியாவின் புதிய அடையாளம் என்பதும் இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் தாய், சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும்,போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது என்பதே இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருளாகும்.