கோவையில் ஆகஸ்ட் 31 ஞாயிறு விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் – பல சாலைகளில் வாகன நுழைவு, நிறுத்தம் தடை

Spread the love

வரும் ஞாயிறு 31.8.2025 அன்று கோயம்புத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற இருப்பதால், மாநகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

ஞாயிறு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள்:

  • உக்கடம் பஸ் ஸ்டாண்ட் → பேரூர் செல்லும் வாகனங்கள்: பேரூர் பைபாஸ் – செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழி.

  • காந்திபுரம் & டவுன்ஹால் → வைசியாள் வீதி, சலிவன் வீதி செல்லும் வாகனங்கள்: உக்கடம் – பேரூர் பைபாஸ் – செல்வபுரம் வழி.

  • உக்கடம் → திருச்சி ரோடு செல்லும் வாகனங்கள்: சுங்கம் பைபாஸ் வழி.

  • உக்கடம் → மேட்டுப்பாளையம்/தடாகம் ரோடு: ஒப்பணக்கார வீதி – ஐந்துமுக்கு – பெரிய கடை வீதி – ரயில் நிலையம் வழியாக காந்திபுரம்.

  • மேட்டுப்பாளையம் → நகருக்குள்: சங்கனூர் பாலம் வழி கணபதி – காந்திபுரம். மாற்று வழி: வடகோவை மேம்பாலம் – காந்திபுரம்.

  • பேரூர் → நகருக்குள்: பேரூர் ரோடு – செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி – பேரூர் புறவழிச்சாலை – உக்கடம்.

  • மருதமலை → நகருக்குள்: லாலி ரோடு – தடாகம் ரோடு – ஜி.சி.டி. – பாரதி பார்க் – அவினாசிலிங்கம் பல்கலை – மேட்டுப்பாளையம் ரோடு.

  • அவிநாசி சாலை → நகருக்குள்: கூட்ஸ் ஷெட் – மரக்கடை சந்திப்பு – என்.எச். ரோடு – ஐந்துமுக்கு – டவுன்ஹால் – உக்கடம்.

வாகன நிறுத்த தடை சாலைகள்:
ராஜா வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரிய கடை வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், தெலுங்கு வீதி, சுக்ரவாரப்பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தெப்பக்குளம் மைதானம், பூ மார்க்கெட் ரோடு, பால் மார்க்கெட் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, டி.பி. ரோடு, லைட் ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோடு, தடாகம் ரோடு, பூசாரிபாளையம் ரோடு ஆகிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்களின் பயணத்தினை திட்டமிடுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.