வருகின்ற ஜூலை 12, அன்று கோவையில் நடைபெற உள்ள “Play On – ஸ்டார்ஸ் நைட் அவுட்” எனும் கலை நிகழ்ச்சி குறித்து நடைபெற்ற செய்தியாளர் மற்றும் இன்புளுன்சர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி ஷெட்டி, ‘கோவை தமிழ் தனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா மற்றும் இசைத்துறை பிரபலங்களை ஒரே மேடையில் இணைக்கும் Play On – ஸ்டார்ஸ் நைட் அவுட் எனும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி கோவை ஹிந்துஸ்தான் கான்சர்ட் மைதானத்தில், வருகின்ற ஜூலை 12 அன்று நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிக்கான போஸ்டர் மற்றும் லோகோ வெளியிடும் நிகழ்வும் இந்த கலை நிகழ்ச்சி குறித்து விளக்கும் வகையில், செய்தியாளர் மற்றும் இன்புளுன்சர் சந்திப்பும் கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் நடிகை கீர்த்தி ஷெட்டி, பாடகி ரேஷ்மா ஷ்யாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி, கோவை தமிழ் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். மேலும், நேரடித் தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவை தருவார்கள் என்று நம்புவதாகவும் கூறினார். இந்த சந்திப்பில், பத்திரிக்கையாளர்களும் 100-க்கும் மேற்பட்ட இன்புளுன்சர்களும் கலந்து கொண்டனர்.
வருகின்ற ஜூலை 12 அன்று நடைபெற உள்ள Play On – ஸ்டார்ஸ் நைட் அவுட் கலை நிகழ்ச்சியில், தமன்னா, கீர்த்தி ஷெட்டி, ஓவியா, யாஷிகா ஆனந்த், உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்நிகழ்வில், ஹரிஷ் ராகவேந்திரா, ஹர்ஷவர்தன், சிவாங்கி கிரிஷ், ஐக்கி பெர்ரி உள்ளிட்ட இசைக்கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நேரடி பாடல்கள், DJ இசை தொகுப்புகள், நவீன ஒலி மற்றும் ஒளி தொழில்நுட்பத்துடன் கூடிய மேடை வடிவமைப்பு, என பல்வேறு சிறப்பம்சங்கள் Play On – ஸ்டார்ஸ் நைட் அவுட் கலை நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன. இந்த கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூபாய் 599-ல் இருந்து துவங்குகிறது. இந்த டிக்கெட்டுகளை BookMyShow, District, Hitit.in, மற்றும் TicketPrix ஆகிய தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
Leave a Reply